பூந்தமல்லி போக்குவரத்து வட்டார அலுவலக அதிகாரிகள், ஆவடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் இயக்கப்படும் 664 பேருந்துகளை நேற்று சோதனைக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வின் முடிவில், பேருந்துகளில் மாணவர்களை கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.