மேலும் ஆடி மாதத்தில் நடைபெறும் 14வாரம் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் கோவிலுக்கு வந்து செல்வதால் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தங்கும் விடுதி, அன்னதான கூடம், மொட்டை அடிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இதற்கான பணியில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கட்டிடம் ஒன்றின் மேல்தளத்தில் கட்டுமானபணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திபாகர் பாலா என்ற தொழிலாளி கால் இடறி கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.