திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்கவும் கட்சி சிறப்பாக செயல்பட மகாபலிபுரத்தில் நடக்க உள்ள பொதுக்குழு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இ சி ஆர் பி சரவணன் மற்றும் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகி பிரகாஷ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை அபிஷேக அலங்காரம் செய்து வழிபட்டனர். கோவில் கோபுரம் முன்பு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷங்கள் எழுப்பி மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்