திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 12 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்ததாக லோகேஷ் (25) என்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். முகாமில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருத்தணி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.