திருவள்ளூர்: பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை..போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் வெங்கட்ராஜகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விவசாய பணிக்கு சென்ற இவரது பெற்றோர் திரும்பி வந்து பார்க்கும் பொழுது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் இறந்து போன பெண்ணின் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் கடும் வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் இறந்து போன பெண்ணின் தந்தை ராமச்சந்திரன் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்து கொண்ட பள்ளிப்பட்டு போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன மாணவியின் பிரேதம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி