திருவள்ளூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு இன்று ஸ்ரீ சீதாராமர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ ராமரால் மாங்கல்யம் சீதைக்கு ஆஞ்சநேயர் லக்ஷ்மணன் ஆகியோர் முன்பாக கட்டப்பட்டு பின்னர் மாலை மாற்றும் நிகழ்வுகள் தீப ஆராதனைகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பொன்னேரி மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?