திருவள்ளூர்: சுங்கச்சாவடியில் தேங்கி நிற்கும் மழை நீர்

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கனமழையால் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. ஆந்திரா நோக்கி செல்லும் பாதையில் தேங்கியுள்ள நீரால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து செல்கின்றன. சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் உடனடியாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி