பொன்னேரி: மின் மோட்டார் வயர்களை திருடிய நபர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு லிங்கப்பையன் பேட்டை மெதூர் கல்மேடு சுற்றுவட்டாரங்களில் விவசாய பம்பு செட்டுகளில் மின்மோட்டார்களுக்கு பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த காப்பர் வயர்களை தொடர்ந்து குறிவைத்து கும்பல் ஒன்று திருடி வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு மின்மோட்டார்களை பதம் பார்த்த இந்த கும்பல் 60 முதல் 100 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்களை திருடிச் சென்றது. 

இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர். இந்த நிலையில் லிங்கப்பையன் பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரித்த போது அவர் மின்சாரத்தையை திருட வந்தது தெரிய வந்தது. 

இதனை அடுத்து பொன்னேரி காவல் நிலையத்தில் அவரை விவசாயிகள் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்துடன் ஒப்படைத்து புகார் அளித்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி