காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து துணை ஆணையர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் ஆவடி துணை ஆணையர் பாலகிருஷ்ணன் வழக்கம் போல் மேற்கொள்ளும் வருடாந்திர ஆய்வினை நேற்று(அக்.2) மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் பணிக்கு உள்ளனரா? மற்றும் வழக்கு விவரங்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன்
எண்ணூர் உதவி ஆணையர் வீரக்குமார், காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் உடனுக்குடன் தடுக்கவும், பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி