மதுரவாயல், கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், கடந்த 17ம் தேதி அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த நபர் ஒருவர் அவரிடம் ஆபாச சைகை காட்டியுள்ளார். பெண் சத்தம் போடவே, அந்த நபர் தப்பிச் சென்றார். இது குறித்து விசாரித்த மதுரவாயல் போலீசார், பூந்தமல்லி செந்நீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரரான சரவணன்(35) என்பவரை நேற்று கைது செய்தனர்.