திருவள்ளூர்: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தமிழகம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளையும் (டிச.4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி