பூந்தமல்லி: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லியில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.50 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி மெட்ரோ ரயில் சென்றது. நேற்று (மார்ச் 20)  மாலை சோதனை ஓட்டம் நடைபெற இருந்த நிலையில் மின்சார வயர் அறுந்து விழுந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 7 மணி நேரத்திற்குப் பின்பு இரவு 11:45 மணி அளவில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் தொடங்கி ஆளில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக சென்றது. 

குறிப்பாக ஓட்டுநர் இல்லாமல் தானியங்கியாக மெட்ரோ ரயில் இயங்கும் என கூறப்பட்ட நிலையில் மெட்ரோ ரயிலின் மேல் பச்சை, சிவப்பு நிறத்தில் விளக்குகள் எரிந்த நிலையில் ரயில் உள்ளே மெட்ரோ நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் வீடியோ மற்றும் புகைப்பட எடுப்பதைப் பார்த்து தாட்டி கை அசைத்தபடி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அதேபோல் வெற்றிகரமாக பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் தொடங்கி முல்லை தோட்டம் வரை சென்று திரும்பவும் வெற்றிகரமாக மெட்ரோ ரயில் புறப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்து சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது, தடைகளை உடனடியாக சரி செய்து மெட்ரோ நிர்வாகம் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி