சுரங்க பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த சேர்வராயன்

மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தில், சேர்வராயன் இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மொத்தம் 824.6 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைத்து, மூலக்கடை மெட்ரோ நிலையத்தை இயந்திரம் வந்தடைந்துள்ளது. இது TU01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒன்பதாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணியாகும்.

தொடர்புடைய செய்தி