பொன்னேரி: கல்வி உதவித்தொகை வழங்கல்

பொன்னேரி சுற்று வட்டாரத்தில் கல்வி பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கற்கை நன்றே கிராமக்கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி சீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு (2025), அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி பேக் உடன் தலா ஒரு வருடத்திற்கான அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் வசூல் செய்யும் கல்வி கட்டணம் கல்விச்சீராக வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் மாணவ மாணவிகளுக்கு கல்விச்சீர் வழங்கியதுடன்
பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். 

கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை மூலம் மாலை வகுப்பு பயின்ற 10ம் வகுப்பு மாணவி டில்லி குமாரி பொதுத்தேர்வில் 454 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற மைக்கு ரூபாய் 56 ஆயிரம் மேற்படிப்பிற்காக வழங்க வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மாணவி மதுமிதாவிற்கு பத்தாயிரம் ரூபாயும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி