சென்னை குப்பம் பிரதான பகுதியில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் மின்கம்பம் இடிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மின்கம்பம் சரி செய்யப்படாததால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கடந்த 24 மணி நேரம் இல்லாத காரணத்தினால் தற்போது அப்பகுதி வாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் அறிந்து தற்போது காவல்துறையினர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை