ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சேகர், மதுபோதையில் அடிக்கடி மனைவி பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 21ம் தேதி இரவு, மது குடிப்பதற்காக பணம் கேட்டு பிரியாவை செங்கல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மதுரவாயல் போலீசார் சேகரை நேற்று கைது செய்தனர்.