இதில் அப்பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் பங்கேற்று சிறப்பு மருத்துவரிடம் குழந்தையின்மை குறித்த ஆலோசனைகளை பெற்றனர். மேலும் மருத்துவ உதவி பெற உள்ள தம்பதிக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கவும் அறக்கட்டளை சார்பில் நிதி உதவி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் ஆண்களுக்கு இலவச விந்தணு பரிசோதனையும் நடைபெற்றது. தனியார் கருத்தரித்தல் மையங்கள் பெருகி வரும் நிலையில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு இந்த ஆலோசனை முகாம் பெரும் உதவியாக இருந்தது என பெண்கள் தெரிவித்தனர். இந்த இலவச முகாமை ஏற்பாடு செய்த கவுன்சிலர் V. V. கிரிதரனுக்கு தங்கள் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது