திருவள்ளூர்: டிராக்டர் உடன் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில், டிராக்டரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுவன் ரானேஷ் (6) டிராக்டருடன் விவசாயக் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டான். அவனது உறவினர் யாஷின் (5) உடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கனகம்மாசத்திரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி