மேலும் இந்தியாவும் - பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியதால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது
அதன்படி, தமிழகத்தில் நேற்று சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணு மின் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக இன்று எண்ணூர் காமராஜர் துறைமுகம், மணலியில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.