திருவள்ளூர்: திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் மாவட்டம் ஆலாடு ஊராட்சியில் உள்ள பொழுது விடிந்தான் மேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீலாய தாக்ஷி ஸ்வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவானது இன்று நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் கைலாய வாத்தியங்கள் முழங்க புனித நீரானது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஸ்வேதபுரீஸ்வரர் மற்றும் அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

பின்னர் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, தொடர்ந்து பக்தர்களின் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி