அப்போது நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் சிறிய மழை பெய்தாலும் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுவதாகவும், மாவட்ட ஆட்சியர்களிடம் பலமுறை தெரிவித்தும் தீர்வு காணப்படவில்லை, ரயில்வே துறையினர் பணிகள் செய்ய தடை செய்வதாகவும் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள் என்று பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஆட்சியர், ரயில்வே துறை அதிகாரிகள் ஏதாவது கேட்டால் கலெக்டரிடம் பேசுங்கள் என தெரிவியுங்கள். விரைந்து பணியை தொடங்கி மழை பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி
திமுகவின் சாதனைகள் குறித்து வீடு வீடாக பரப்புரை