இந்நிலையில் மாலை 4 மணியளவில் இந்த குடோனில் வெண்புகை ஏற்பட்டு தீப்பிழம்பு பிடித்து திடீரென கெமிக்கலில் தீ பிடித்ததால் மளமளவென்று தீ பரவி குடோன் முழுவதும் எரிந்தது, மாதவரம் செங்குன்றம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக அங்கு பணியில் இருந்த வட மாநில நபர்கள் ஏழு பேருக்கும் மேல் உள்ளவர்கள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட குடோன் அருகில் எரிவாயு சிலிண்டர்கள் இருக்கும் குடோன் இருந்ததால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தும் முயற்சியில் ஊழியர்கள் இறங்கினர்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தீயில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து செங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.