மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே நெய்தவாயல் வழியாக காட்டூர் பழவேற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணி முடிவடையாததாலும், 10 ஆண்டுகளாக ரயில்வே சுரங்கப்பாதை பணி துவங்கப்பட்டு கிடப்பில் உள்ளதாலும், தற்போது வந்தே பாரத் ரயிலை காரணம் காட்டி ரயில்வே கடவுப்பாதையை முற்றிலுமாக மூடியதால், அவ்வழியாக செல்லக்கூடிய ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், பள்ளி கல்லூரி வாகனங்கள், அன்றாடப் பணிகளுக்குச் சென்று விட்டு கிராமப்புறங்களில் உள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்பும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.