திருவாலங்காடு: ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றம்.. வியாபாரிகள் புலம்பல்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் சொந்தமான இடம் காவல் நிலையம் அருகில் மற்றும் கமலத் தேர் நிற்க வைத்துள்ள இடத்தில் எதிரில் உள்ளது. இந்த இடத்தில் பால் கடை, மளிகைக் கடை, பழக்கடை ஆகிய கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததாகவும், கோயிலுக்குச் சொந்தமான இந்த இடத்தை அகற்ற வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதில் இணங்க, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை விட்டு விலகி அவர்கள் சொந்த இடத்திற்குப் பின்னோக்கிச் சென்றனர். 

ஆக்கிரமிப்பு இடத்தை கோயில் நிர்வாகம் மீட்டெடுத்தனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க அந்தப் பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளுக்காக கோயில் நிர்வாக அதிகாரிகள் வந்தனர். அப்போது கடைக்காரர்கள் சுவர் கட்டக்கூடாது என்று கோயில் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து நீங்கள் கண்டிப்பாக இந்த இடத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை செய்துவிட்டு கோயில் அதிகாரிகள் சென்றனர். 

இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், நாங்கள் எங்கே செல்வோம் என்று கடைக்காரர்கள் கோயில் அதிகாரிகளிடம் புலம்பினார்கள். ஏப்ரல் 7ம் தேதி இந்தப் பகுதியில் கோயில் கமலத் திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காகத்தான் இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கோயில் அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி