அப்போது பொன்னேரி வட்டாட்சியரின் அரசு பழைய வாகனம் திடீரென சாலையிலேயே நின்று போனதால் வேறு வழி இல்லாமல் வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாகனத்தை உடனடியாக தள்ளி வேகமாக ஓடிச் சென்று வட்டாட்சியர் சிவக்குமார் வாகனத்தில் ஏறி அமைச்சர்களை ஆய்வுக்கு அழைத்துச் சென்றார். கடந்த பல ஆண்டுகளாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரின் பழைய வாகனம் மாற்றப்படாமல் அதனை பயன்படுத்தி வருவதால் அடிக்கடி இதுபோன்று பழுதுகள் ஏற்படுவதால் வாகனத்தை தள்ளோ தள்ளு என தள்ளும் நிலை ஏற்படுகிறது. அமைச்சர் ஆய்வின்போது வாகனம் பழுதாகியதால் வட்டாட்சியர் சிவக்குமார் ஓடிச்சென்று வாகனத்தில் ஏறி சென்று அமைச்சர்களுடன் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்