திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்ரவர்த்தி. இவர் 2023ல் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அம்பத்துார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சக்ரவர்த்தியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர், செங்குன்றம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். விசாரணை முடிந்து நீதிபதி உமாமகேஸ்வரி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.