வேளாண் துறை பட்ஜெட் இரண்டாவது நாளாக எல்இடி திரையில் நேரலை விவசாயிகள் பொதுமக்கள் யாரும் இன்றி காலியாக காட்சியளிக்கும் இருக்கைகள். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணா சிலை முன்பாக தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 15) எல்இடி திரை மூலம் பொது மக்களுக்கு பார்வைக்கு காண்பிக்கப்பட்டது. வேளாண்துறை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் துறை தொடர்பான நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
அப்போது விவசாயிகள் பொதுமக்கள் யாரும் இல்லாமல் இருக்கைகள் அனைத்தும் காலியாக காட்சியளித்தது. பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மட்டுமே எல்இடி திரையை பார்த்துக் கொண்டிருந்தனர். முறையாக முன்னறிவிப்புகள் ஏதும் இன்றி பொதுமக்கள் விவசாயிகளுக்கு அதனை காண அறிவுறுத்தி ஏற்பாடு செய்யாமல் வெற்று விளம்பரத்திற்காக எல்இடி திரை வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
நேற்றும் (மார்ச் 14) பெரும்பாலான இடங்களில் காலியாக இருக்கையில் இருந்த நிலையில் இன்று (மார்ச் 15) இரண்டாவது நாளாக அதே போன்று நிலையே நீடித்தது.