ஆரணி: அதிக மண் ஏற்றிய லாரி தலைக் குப்புற கவிழ்ந்து விபத்து

சவுடு மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் ஏற்றி கொண்டு சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அரியபாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் அரசு சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. 

இதில் நாள்தோறும் அளவுக்கு அதிகமாக சவுடு மண் லாரிகளில் விதிமுறைகளை மீறி ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் சவுடு மண் லாரி பெரியபாளையம் சாலையில் நிலைத்தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியில் இருந்த மண்ணை அகற்றி போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் அங்கு இருந்து டிப்பர் லாரி அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். 

அப்பகுதியில் தொடர்ந்து தார்பாய் கட்டாமல் கூடுதல் பாரம் ஏற்றி செல்வதால் தூசி பரவி மண் சாலைகளில் கொட்டி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி