திருவள்ளூர்: ஏசி மெக்கானிக்.. மினி லாரி மோதி பலி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஏசி மெக்கானிக் மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஈக்காட்டை சேர்ந்த ஜெய்கணேஷ் என்ற நண்பருடன் சென்ற ஏசி மெக்கானிக் நவ்ஷாத் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மினி லாரி மோதி அவர் மினி லாரி சக்கரம் ஏறி இறங்கியது சம்பவ இடத்திலேயே ஏசி மெக்கானிக் நவ்ஷாத் பரிதாபமாக உயிரிழந்தார். 

வலது கை முறிவு ஏற்பட்டு படுகாயங்களுடன் ஜெய்கணேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் இறந்து போன ஏசி மெக்கானிக் நவ்ஷாத் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி