திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு நிலம் 10 ஏக்கருக்கு பட்டா கேட்ட நபரால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று தீர்வு கண்ட போது ஆக்கிரமிப்பு நிலம் 10 ஏக்கருக்கு அனுபவத்தில் உள்ள நிலம் என்று பட்டா கேட்ட நபரை பயன்படுத்தும் இடத்திற்கு முதலில் வரிசெலுத்துங்கள் என மனு அளித்தவரிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துக்கோட்டையில் ஆக்கிரமிப்பு நிலம் பத்து ஏக்கருக்கு பட்டா கேட்ட நபரை நிலத்தை பயன்படுத்தியதற்கு மனு அளித்த நபரிடம் இன்னும் 100 ஏக்கருக்கு பட்டா கேளுங்கள் ஏன் 10 ஏக்கருக்கு கேட்கிறீர்கள் என்று கூறியதுடன் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேளுங்கள் செடி வைத்துள்ளேன் என்றும் விவசாய நிலங்களுக்கு விளைநிலங்களுக்கு என்று பட்டா கேட்காதீர்கள் என்று கடிந்து கொண்டதுடன் அந்த நபருக்கு அபராத கட்டணம் விதித்து வரி விதிக்க வேண்டும் என்றும் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்று மாறும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருக்கு உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி