மேலும் இந்த மழையின் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வீடுகளுக்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய பாதிப்பு என்று பார்த்தால் கும்மிடிப்பூண்டியை ஒட்டியுள்ள ஆத்துபாக்கம் பகுதியில் மட்டும் நெல் பயிர் அறுவடை செய்யாததால் அப்பகுதியில் மட்டும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை தச்சூர் பொதுவாயில் சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெல்பயிரானது வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்த மழையால் புத்துயிர் பெற்றுள்ளது என்றே சொல்லலாம். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு