இதில், 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 250க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ. டி. ஐ. , மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்று, பயன் பெறலாம்.
தனியார் வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ரத்து செய்யப்படமாட்டாது. மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இம்முகாமில் பங்கேற்று, பயன் பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.