திருவள்ளூர்: சிறுமி பாலியல் வழக்கு; 6 பேரிடம் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்த ஆரம்பாக்கம் போலீசார் மூன்றாவது நாளாக கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர் வேலை பார்த்த தாபா ஹோட்டலில் இருந்து உடன் வேலை செய்த நான்கு வட மாநிலத்தவர்களையும் செல்போன் பழுது நீக்கும் கடையில் டிஸ்ப்ளே மாற்றுவதற்காக சூளூர்பேட்டை ரயில் நிலையம் அருகே குற்றவாளி ராஜு விஸ்வகர்மா அளித்திருந்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது மைத்துனரை உள்ளிட்ட மொத்தம் ஆறு பேரை ஷேர் ஆட்டோவில் சூளூர்பேட்டையில் இருந்து அழைத்து வந்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ கவரப்பேட்டை காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி