அப்போது மாதவரம் ரவுண்டானவில் இருந்து செங்குன்றம் செல்லும் வழியில் புழல் அடுத்த ரெட்டேரி அருகே பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டுப் பகுதியில் இடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதா எழுந்து சுதாதரிப்பதற்குள் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இதுகுறித்து மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகிலா வழக்குப்பதிவு செய்து விபத்து காரணமான லாரி டிரைவர் மணிசிங் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.