புழல்: கண்காணிப்பு கேமராக்கள்; திறந்து வைத்த காவல் துணை ஆணையாளர்

புழல் அடுத்த கதிர்வேடு 31வது வார்டில்  சத்தியமூர்த்தி நகர் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கவும் சமூக விரோதிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் அப்பகுதியில் 31 கண்காணிப்பு கேமராக்களை மாமன்றத் உறுப்பினர் சங்கீதாபாபு முக்கிய இடங்களில் அமைத்து அதன் செயல்பாட்டை இயக்கத்தினை கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், பெருந்துறை முருகன் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இதில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் கூறும்போது பொதுமக்கள் தங்களது வெளியூர் பயணத்தின்போது வீடுகளைப் பூட்டிக்கொண்டு செல்வது பற்றி காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் உங்கள் வீடுகளின் அருகில் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனே காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். 

இதில் காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் துணைத் தலைவரும், சமூக நலன் ஆர்வலருமான பாபு உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி