ஆவடி அடுத்த பட்டாபிராமில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் உரக்கிடங்கு அமைக்க மாநகராட்சி திட்டமிட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக்கூறி, அதிகாரிகள் இடத்தை சுத்தம் செய்ய வந்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசினர்.