ஓராண்டு நிறைவு: திருவள்ளூர் எம்பி செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என அமித்ஷா சொல்லி இருப்பது சிரிக்கத் தக்க விஷயம் என்றும், அரசியல் ரீதியாக தமிழகத்தை பிடிக்க முடியாததால் தமிழகத்திற்கு அடிக்கடி பாஜக தலைவர்கள் வந்து செல்வதாகவும், மூச்சுக்கு 300 தடவை காசியில் தமிழ் சங்கமும் செய்கிறோம் சொல்லும் அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி மூலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ் மொழி ஒரு தொன்மையான மொழி என தர்க்க ரீதியாக காட்டும்போது அதை அங்கீகாரம் செய்யாமல் ஏளனம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் கல்வியில் எந்த அரசாங்கமும் விளையாடியது கிடையாது, ஆனால் பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை ஏற்றால் மட்டும் தான் RTE போன்ற நிதியை விடுவிக்க முடியும் என்று கூறி வருவதாகவும், பாஜக அரசு நாட்டை ஆளும் மன்னர் பரம்பரையாக அவர்கள் நினைத்து வருவதாகவும் அவர் கூறினார். தமிழக மக்களுக்கு அரசியல் தெளிவு இருப்பதால் முருகன் பக்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் மக்களை மத ரீதியாக பாஜக எப்போதுமே உடைக்க முடியாது என்றார்.

தொடர்புடைய செய்தி