அத்திபட்டு: அன்னம் தரும் அமுத கரங்கள் திட்டம்: அமைச்சர் துவக்கம்

ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுத கரங்கள் அன்னதானத் திட்டத்தை முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொளத்தூரில் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக அத்திபட்டு பகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் அமுத கரங்கள் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கியது போல இன்று அத்திப்பட்டில் துவங்கப்பட்டது. 

இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் உணவு வழங்கப்பட உள்ளது. 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை 365 நாட்களும், இந்த திட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி