இதனைக் கண்டதும் அவரது நண்பர் அவரை மீட்கச் சென்ற நிலையில் அந்தச் சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். இரண்டு சிறுவர்களையும் மீட்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த மித்ரன் (12) பலத்த காயம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பூங்காவில் உள்ள மின்கம்பங்களிலிருந்து மின்சார வயர்கள் பழுதடைந்து பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், இதை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தற்போது ஒரு சிறுவன் மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
தவெக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திட்டம்.. டிடிவி தினகரன் ஓபன் டாக்