இப்பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேறு அரசு பள்ளிக்கு பணி மாற்றம் செய்து சென்று விட்டதால் தான் இடைநிலை ஆசிரியராக கல்வி கற்றுத் தருவதாக தெரிவிக்கிறார். அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்ப்பதால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் சமீபத்தில் 28 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு புதிய கட்டிடம், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் சமையலறை கட்டிடம், 48 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டிடம் என கட்டப்பட்ட இந்த பள்ளியில் ஒரே மாணவி மட்டுமே படிக்கும் நிலை தற்போது உள்ளது.
கிராமப்புற மாணவர்கள் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல் உள்ளதால் பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் பல அரசு பள்ளிகளில் இந்த நிலைதான் உள்ளது.