குமரி: பைக்கில் சாகச ரீல்ஸ் எடுத்த 5 இளைஞர்கள்; திகில் வீடியோ

களியக்காவிளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நட்புறவோடு என்ற பெயரில் பைக்கில் சாகசம் செய்து ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துவது, ஆபாச செய்கை காட்டுவது என அட்டகாசம் செய்து வந்தனர். இந்த கும்பல் ஆபத்தான வகையில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. வீடியோவை பார்த்த பலர் கண்டித்தனர். இந்த விஷயம் களியக்காவிளை போலீசாரின் கவனத்திற்கு சென்றது. 

இதையடுத்து நேற்று களியக்காவிளை உட்பட்ட படந்தாலுமூடு சோதனை சாவடி அருகில் ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை போலீசார் அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். உடனே ஐந்து பேரை கைது செய்த போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), ஜெபின் (21), ஜோயல் (21) மேலும் 18, 17 வயது ஆன கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இளைஞர்கள் வந்த இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேரின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து கண்டித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி