இந்நிலையில், திடீரென பின்வாங்கிய அவர், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மகாலட்சுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்துள்ளனர். மேலும், 3 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு போலீசில் புகார் அளிக்காமல் சென்றுவிட வேண்டும் என மகாலட்சுமியை கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் அவர் நேரில் மனு அளித்தார். அவரது உத்தரவின்பேரில், ஏமாற்றுதல், திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு கொள்ளுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.