ராதாபுரம் அருகே தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை அமிர்த ஹெலன் ராஜாத்தியிடம், பாதிரியார் தேவராஜன் மற்றும் அவரது உதவியாளர் பவுலின் ராணி ஆகியோர் 160 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்று ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவுலின் ராணியை நேற்று கைது செய்தனர். அவரிடம் இன்று தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.