தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த சுகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த் மோகன் நெல்லை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்த் மோகன் ஏற்கெனவே நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.