இந்தப் பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலையில் தற்போது எல்கேஎஸ் டேங்கில் இருந்து தியாகராஜ நகர் பகுதியில் 500 வீடுகளுக்கு மேலாக உள்ள இடங்களுக்கு குடிநீர் வழங்க முயற்சி நடைபெற்ற வருவதாகவும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு முறையாக சீரான குடிநீர் ஒருநாள் விட்டு ஒரு நாள் வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி நேற்று(செப்.6) மாலை 5 மணி அளவில் ஜெப கார்டன் சந்திப்பு பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பெருந்திரளான ஆண்கள், பெண்கள் காலி குடங்களுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாநகராட்சி குடிநீர் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். பின்னர் மக்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.