ராதாபுரம்: தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி பாசன விவசாயிகளின் வசதிக்காக கோதையாறு பாசன திட்டம் ராதாபுரம் கால்வாயில் நிலப்பாறை பகுதியில் இருந்து தண்ணீரை இன்று ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு திறந்து வைத்தார். இதன் மூலம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 52 குளங்கள் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி