விஜயநாராயணம் அருகே வயலில் ஏற்பட்ட பிரச்சனையில், 2021ல் முத்துக்குமார் மற்றும் அவரது மகன் வெள்ளத்துரை ஆகியோரைக் கொலை செய்ய முயன்றதாக மாங்குளம் பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை மீது வழக்கு தொடரப்பட்டது. நாங்குநேரி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி ராமதாஸ் இன்று சேர்மதுரைக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.