திசையன்விளை மணலி விளைப்பகுதியைச் சேர்ந்த உச்சிமாகாளி (80) என்பவர் ஓட்டலில் உணவு வாங்கிவிட்டு பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் பங்கில் வந்தபோது நிலைதடுமாறி, பெட்ரோல் போட வந்த கிரேனின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திசையன்விளை போலீசார் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.