நெல்லை மாநகர பாளையங்கோட்டை உயர் சிகிச்சை பிரிவு மருத்துவமனை அருகில் கடந்த நான்கு மாதங்களாக மாநகராட்சி நிர்வாகத்தினரால் பாதாள சாக்கடை ஓடுகின்ற பெயரில் தோண்டப்பட்ட குழிகள் இன்னும் சரிவர மூடப்படவில்லை. இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதற்கு மாநகராட்சி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.