நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இன்று சர்வதேச புகைப்பட தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறையினர் செய்திருந்தனர். இதில் புகைப்பட கலை பெருமையை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் ரோஷன் வரவேற்றார்.